Tuesday, October 23, 2012

டெலிவரிக்கு பின் வயறு இறுக உதவும் exercise

பெரும்பாலான பெண்களுக்கு டெலிவரிக்கு பின் வயறு தொல தொளா  என்றாகிவிடும். முன் போல் நல்ல இறுகிய வயறு வேண்டுவோர் கீழ்க்கண்ட exercise டாக்டரின் ஆலோசனைக்கு பின் செய்யலாம். காலை வெறும் வயிற்றில் செய்தால் சுலபமாக இருக்கும். விரும்புவோர் காலை மாலை இரு வேளையும் செய்யலாம். தொடர்ந்து 3-6 மாதங்கள் செய்தால் வயறு நன்கு இறுகி வரும். அதன் பின்னும் தொடர்ந்து செய்தால் ரொம்பே நல்லது. என்ன ஒரு 5 நிமிஷம் தானே. செய்து தான் பாருங்களேன்!

Exercise  1:

1.தரையில் மல்லாக்க படுத்து கொள்ளவும்.
2. கால் முட்டியை மடக்கி பாதங்கள் தரையில் படுமாறு காலை inverted "V " போல் மடக்கி கொள்ளவும்.
3. கை பாதத்தை (Palm ) அடி வயற்றின் மேல் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து கொள்ளவும்.
4. இப்பொழுது வயிற்றை மெதுவாக உள் இழுத்து இறுக்கவும். 6 வினாடிகள் அப்படியே வைத்து இருந்து பின் மெதுவாக வயிற்றை ரிலீஸ் செய்யவும்.
5. இது போல் 5 முறை செய்தால் போதும்.

 Exercise  2:

1.தரையில் மல்லாக்க படுத்து கொள்ளவும்.
2. கால் முட்டியை மடக்கி பாதங்கள் சுவற்றை நோக்கி வைத்து கொள்ளவும்.
3. மெதுவாக சைக்கிள் ஓட்டுவது போல் கால்களை முன்னும் பின்னும் நன்கு  நகர்த்தவும். இது போல் 20 முறை செய்வவும். பின் கால்களை இறக்கி ரெஸ்ட் செய்யவும்.
4. இன்னொரு முறை ஸ்டேப் 3 (20 முறை cycling) repeat செய்வவும்.

அவளோ தான்!!!. செஞ்சு பாருங்க .

Sunday, October 7, 2012

பால் பாட்டில் உபயோகிக்கும் முறை!


நான் முதல் முறை என் குழந்தைக்கு பால் பாட்டில் உபயோகிக்கும் போது பாட்டில் மூடியை நல்லா இறுக மூடி (அப்போ தானா  பால் லீக் ஆகாது) குடுத்தேன் ;). குழந்தை பாட்டிலே வாயில் சில நிமிடங்கள் வைப்பா , திரு திருன்னு முழிப்பா , அப்றோம் பாட்டிலே தள்ளி விட்டிடுவா. எனக்கு ஒண்ணுமே புரியலை. அப்றோம் தான் அம்மா சொன்னங்க பால் பாட்டிலே ரொம்பே இறுக மூடாமல் கொஞ்சம் லேசாகவே மூடனும். அப்போ தான் காற்று உள்ள போய் , பால் வெளில வர ஈஸியா இருக்கும்.

பால் பாட்டில் உபயோகிக்கும் போது நிப்பிள் , பாட்டிலே  தினமும் ஒரு முறையாவது தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு sterlise பண்ணனும். மற்ற நேரம் அவற்றை கிளீனிங் liquid போட்டு , பாட்டில் பிரஷ் கொண்டு நன்கு தேய்த்து  கழுவி காய விடனும். உபயோகிக்கும் ஒவ்வொரு முறையும் sterlise பண்ண விரும்புபவர்கள் பாட்டில் sterliser  வாங்கிக்கலாம். வேலை சுலபமாகும்.

சில குழந்தைகள் பாட்டில் பீடிங் பழக சில நாள் பிடிக்கும். எனவே பாட்டில் பீடிங் ஆரம்பிக்க சில நாட்களுக்கு முன்பில் இருந்தே குழந்தைக்கு பாட்டிலே தண்ணீர் ஊற்றி விளையாட  குடுத்திடுங்க. (அனால் நீங்கள் கூடவே இருந்து கவனமா பார்த்துக்கணும். இல்லேன கண்ணு, மூக்கு,காதுக்குள்ள தண்ணீரை ஊத்திக்க வாய்ப்பு உள்ளது). மெதுவா அவங்களே அதை வாயில் வெச்சு பழகுவாங்க. அப்புறம் சப்பி பழகுவாங்க. ஒரு வாரம் ,10 நாளில் பாட்டிலே  இருந்து குடிச்சு பழகிடுவாங்க. அதன் பிறகு பாட்டிலில் பால் குடுக்கலாம். உங்கள் மடியில் உட்க்கார வச்சு  குடுங்க. எக்காரணம் கொண்டும்  குழந்தை படுத்த நிலையில் பீட் பண்ண வேண்டாம். அவ்வாறு செய்தால் வாயில் இருக்கும் பால்/தண்ணீர் காதுக்குள் ஏறி ear infection வர வாய்ப்பு அதிகம். குழந்தையின் காது உள் பகுதி முழு வளர்ச்சி ஆகாமல் இருபதால் முதல் வருடம் முழுவதும் பீடிங்(பாட்டில் பீடிங் /மதர் பீடிங் எதுவானாலும் சரி) பண்ணும் போது கவனம் தேவை.

Saturday, October 6, 2012

சளி தொல்லைக்கு கற்பூரவள்ளி/ஓமவள்ளி


கற்பூரவள்ளி இலை இரண்டு அல்லது மூன்று எடுத்துகோங்க. அதை ஒரு ஜல்லடையில் வெச்சு நல்ல விரல்களால் கசக்குங்க. கசக்கி பிழிஞ்சா சாறு வரும். 6-12 மாசத்துக்குள்  உள்ள குழந்தைனா 3 சொட்டு போதும். பாலில் கலந்து குடுக்கலாம். அல்லது தேனில் கலந்து குடுக்கலாம். பெரிய குழந்தைகளுக்கு 5-6 சொட்டு குடுக்கலாம். பொதுவா என் குழந்தை இந்த சாற்றை தேனில் கலந்து கொடுத்தால் குடிக்க மாட்டாள். எனவே நான் இதை குழந்தைகளுக்கு செய்யும் உப்பு பருப்பில் கலந்து சாதத்தில் பிசைந்து குடுப்பேன். அல்லது அவளுடைய காஞ்சியில் கலந்திடுவேன். தோசை மாவிற்குள் பொடியாக நறுக்கி போட்டுக்கலாம். இது பெரியவர்களுக்கும் சளி இருமலுக்கு நல்ல மருந்து. இரவில் சாபிட்டால் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் குறையும். குழந்தைக்கு பிடிக்கும் எந்த உணவிலும் சேர்த்து குடுக்கலாம். நான் சமயத்தில் முட்டை வறுவல், fried rice போன்றவற்றுள் பொடியாக நறுக்கு போட்டிடுவேன் ;) அனால் தேனில் கலந்து சாபிடுவது பெஸ்ட். அப்படி சாப்பிடத குழந்தைகளை மிரட்டி, அமுக்கி கொடுப்பதை விட இப்படி mask பண்ணி குடுத்திடுங்க. நீங்களும் சளிக்கு சாப்பிட்டு பாருங்க. இருமலுடன் கூடிய சளிக்கு கை கண்ட மருந்து இது.

 Note: குழந்தைக்கு காய்ச்சலுடன் சளி இருந்தால் இந்த சாற்றை தேனில் கலந்து குடுக்க வேண்டாம். வேறு விதங்களில் குடுங்க. ஏனெனில் தேன் சூடு ஆனால் toxic ஆகிடும்னு ஆயுர்வேதத்தில் சொல்றாங்க. வெதுவெதுப்பான temperatureகு  மேல் போக கூடாது. காய்ச்சல் உள்ள போது உடம்பு சூடிற்கு தேன் toxic ஆகிடும்னு சொல்றாங்க.

இதோ கற்பூரவள்ளி/ஓமவள்ளி  செடி .

http://agritech.tnau.ac.in/horticulture/horticulture_gallery/medicinal_crops/pages/Karpoora%20valli%20%28Coleus%20aromaticus%29.html